GuidePedia

கட்சியின் சட்டத்தை மீறியதாக தெரிவிக்கப்படும் ஐந்து உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை முன்னெடுக்க  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
டளஸ் அழகப்பெரும, பிரசன்ன ரணதுங்க, விதுர விக்கிரமநாயக்க, ஜனக பண்டார தென்னகோன், தனசிறி அமரதுங்க ஆகியோர் இதில் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
கட்சியின் ஒற்றுமைக்கு எதிராக பல்வேறு தடைகளை ஏற்படுத்தினார்கள் என இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டுக் குறித்த பிரேரணை  நாளை நாடைபெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பிரேரணையை முன்வைப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு, நிறைவேற்றுக் குழு  என்பவற்றின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.



 
Top