GuidePedia

புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதற்கமைய காலை 8.30 மணி முதல் மாலை 4 மணிவரையான காலப்பகுதிக்குள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் புத்தளம் மாவட்ட மின் பொறியிலாளர் பணிம​னை அறிவித்துள்ளது.
உயர் அழுத்த மின் கம்பி கட்டமைப்புகளில் முன்னெடுக்கப்படவுள்ள அவசர திருத்த வேலை காரணமாக மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலாவி தொடக்கம் கற்பிட்டிக்கு இடைப்பட்ட பல பகுதிகளில் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது .
பனையடி,பூளாச்சேனை,நுரைச்சோலை,கொய்யாவாடி,ஏத்தலை,பாலக்குடா,தளவில்,கந்தக்குடா,கன்டக்குளி உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக புத்தளம் மாவட்ட மின் பொறியிலாளர் பணிமனை தெரிவித்துள்ளது.




 
Top