GuidePedia




துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று மாலை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், முஸ்லிம் சமய
பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள் மற்றும் உலமாக்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

நாட்டின் எப்பாகத்திலாவது தலைப் பிறை தென்பட்டால் தகுந்த ஆதாரங்களுடன் 0714817380, 011 2432110 மற்றும் Fax 011 2390783 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு அகிலஇலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிறைக்குழு அறிவித்துள்ளது.




 
Top