GuidePedia


உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்டு பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்று திங்­கட்­கி­ழமை இந்­தி­யாவின் புது­டில்லி நோக்கி பய­ண­மா­கின்றார்.


இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோ­டியின் உத்­தி­யோ­க­பூர்வ அழைப்பை ஏற்று ரணில் விக்­கிர­ம­சிங்க இந்த விஜ­யத்தை மேற்­கொள்­கின்றார்.இந்த விஜ­யத்தின் போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்­திய பிர­தமர் நரேந்­தி­ர­மோடி, இந்­திய ஜனா­தி­பதி பிரணாப் முகர்ஜி, வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்­ளிட்ட தலை­வர்­க­ளுடன் இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்­தை­களை நடத்­த­வுள்ளார்.

இந்த இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்­தை­களின் போது இந்­தி­யா­வுக்கும் இலங்­கை்கும் இடை­யி­லான இரு­த­ரப்பு உறவை மேலும் வலுப்­ப­டுத்­து­வது தொடர்­பா­கவும், பிராந்­தி­யத்தின் சமா­தானம், மற்றும் நல்­லி­ணக்­கத்தை உறு­திப்­ப­டுத்­து­வது குறித்தும் மிகவும் விரி­வான முறையில் ஆரா­யப்­ப­ட­வுள்­ளது.

அத்­துடன் இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோ­டி­யு­ட­னான சந்­திப்பின் போது இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள உள்­ளக விசா­ரணை பொறி­மு­றைக்கு ஆத­ரவு வழங்­கு­மாறு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கோரிக்கை விடுப்பார் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அது­மட்­டு­மன்றி இலங்­கையின் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சியல் தீர்வைக் காணும் விடயம் குறித்தும் இரண்டு நாடு­க­ளுக்­கி­டை­யி­லான மீனவர் பிரச்­சினை தொடர்­பா­கவும் இலங்கை பிர­த­மரும், இந்­தியப் பிர­த­மரும் கலந்­து­ரை­யா­ட­வுள்­ளனர்.

அதா­வது இலங்­கைக்கு இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான முக்­கிய நான்கு விட­யங்கள் தொடர்­பாக இலங்கை இந்­திய பிர­த­மர்­க­ளுக்கு இடையில் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­படும் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

எனினும் இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடையில் அவ­தா­னத்­துக்­குட்­பட்­டுள்ள சீபா உடன்­ப­டிக்கை தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவின் இந்­திய விஜ­யத்­தின்­போது கலந்­து­ரை­யா­டப்­ப­ட­மாட்­டாது என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இந்த விஜ­யத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் சர்­வ­தேச வர்த்­தக அமைச்சர் மலிக் சம­ர­விக்­கி­ரம, பிர­தமர் செய­லாளர் சமன் ஏக்­க­நா­யக்க, மேல­திக செய­லாளர் சமன் அத்­த­த­வுத ஹெட்டி, இந்­தி­யா­வுக்­கான புதிய உயர்ஸ்­தா­னி­க­ராக நிய­மிக்­கப்­ப­ட­வுள்ள எசல வீரகோன் ஆகி­யோரும் இடம் பெறு­கின்­றனர்.

மேலும் ஜெனிவா சென்­றுள்ள வெளி­வி­க­வார அமைச்சர் மங்கள சமரவீர திங்கட்கிழமை இரவு ஜெனிவாவிலிருந்து நேரடியாக புதுடில்லிக்கு வருகை தரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வெளி விஜயமாக இந்திய விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




 
Top