ஒசாமா பின்லேடன் இன்னும் உயிரிழக்கவில்லை. அவர் அமெரிக்க உளவுத்துறையின் பாதுகாப்பில் சொகுசாக வாழ்ந்து வருகிறார் என எட்வர்ட் ஸ்னோடன் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க பாதுகாப்பு ரகசியங்களை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர் எட்வர்ட் ஸ்னோடன், அமெரிக்காவின் நடவடிக்கைக்கு அஞ்சி 2013ஆம் ஆண்டு அங்கிருந்து வெளியேறினார்.
தற்போது ரஷ்யாவில் தஞ்சம் பெற்றுள்ள அவர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
அதில், ஒசாமா பின்லாடன் இறக்கவில்லை என்றும், அவர் தற்போதும், உயிருடன் இருக்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.யின் பாதுகாப்பில் வட அமெரிக்காவின் பகாமாவில் அவர் வசித்து வருகிறார் எனவும், இதற்கான ஆதாரங்கள் பல தன்னிடம் உள்ளதாகவும், எட்வட் ஸ்னோடன் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதோ எட்வர்ட் ஸ்னோடன் தெரிவித்த கருத்துக்கள்


