GuidePedia


ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து அனுர பிரியதர்ஷன யாப்பாவும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்தவும் நீக்கப்பட்டுள்ளனர்.

பதிலாக துமிந்த திசாநாயக்க ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பதில் செயலாளராகவும், விஸ்வ வர்ணபால ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பதில் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

கட்சியின் யாப்பு அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தெரியவந்தது.

துமிந்த திசாநாயக்க மற்றும் விஸ்வ வர்ணபால ஆகியோர் தமது பணிகளை முன் எடுத்து செல்ல தடை ஏற்படுத்த கூடாது என்று கோரி மனு ஒன்றை தாக்கல் செய்த வேளையில் இந்த விடயம் வெளியானது.

இந்தநிலையில், மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோரின் பணிகளுக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி வரை  இடைக்கால தடையுத்தரவை விதித்தது.

அத்துடன் புதிய பதில் செயலாளர்களான துமிந்த திசாநாயக்க மற்றும் விஸ்வ வர்ணபாலவின் பணிகளுக்கு தடைகளை ஏற்படுத்தக் கூடாது என்றும் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது.










நன்றி - ஹிருநியூஸ்



 
Top