இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பிலான உள்ளக பொறிமுறையின் விசாரணை அம்சங்களை இலங்கை அரசாங்கம், அமெரிக்க அரசாங்கத்திடம் கையளித்துள்ளது.
இந்தத் தகவலை அரசாங்கத்தின் உயர்மட்டத்தரப்பு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வருகை தந்திருந்த நிஷா பிஸ்வாலிடம் இந்த பொறிமுறை கையளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இலங்கை அரசாங்கத்தின் குறித்த பொறிமுறை குறித்து பிஷ்வால் தமது மகிழ்ச்சியை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொறிமுறையின் கீழ் நீதியை நிலைநாட்டுதல் மற்றும் 90ஆம் ஆண்டுகளில் தென்னாபிரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு ஒத்தவகையில் இந்த பொறிமுறை அமைந்துள்ளது.
இதேவேளை சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நல்லிணக்க அமைச்சு ஒன்று அமைக்கப்படவுள்ளது.
இது பெரும்பாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.