(க.கிஷாந்தன்)
நுவரெலியாவில் வசந்த கால நிகழ்வுகளையொட்டி பொலிஸ் மோப்ப நாய்களின் சாகச நிகழ்வுகள், (18.04.2015) இன்று காலை நுவரெலியா மாநகர சபை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன.
நுவரெலியா பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொலிஸ் மோப்ப நாய்கள் பல்வேறுவிதமான சாகசங்களை செய்து காட்டின.
இதன்போது நுவரெலியா மாநகர சபை தலைவா் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தா்கள் மற்றும் பொது மக்கள், சுற்றுலா பயணிகள் என பலரும் கலந்து கொண்டனா்.







