GuidePedia

18ம் திருத்தச் சட்டத்திற்கு வாக்களித்து செய்த பிழைகளை திருத்திக் கொள்ள சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
19ம் திருத்தச் சட்டம் குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவா் இதனைத் தெரிவித்துள்ளார்.
19ம் திருத்தச் சட்டத்திற்கு சில யோசனைகளை முன்வைத்து, வேறும் நோக்கங்களை அடைந்து கொள்ள முயற்சிக்கின்றனர்.
தேர்தலின் போது ஜனாதிபதி அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தேர்தல் முறைமை மாற்றம் குறித்து சிறுபான்மை மக்களின் கருத்து கோரப்பட வேண்டும்.
தேசிய கொடி மாற்றியமைக்கப்பட்டு காண்பிக்கப்பட்டமை ஆச்சரியமளிக்கின்றது.
இவ்வாறான ஓர் நிலைமை மீளவும் இடம்பெற இடமளிக்கப்பட முடியாது என ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.



 
Top