GuidePedia


நேபாளத்தை சனிக்கிழமை தாக்கிய 7.9 ரிக்டர் அளவிலான மோசமான நில நடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நிலநடுத்தால் 72 பேர் உயிரிழந்தனர். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, பல்வேறு தரப்பில் இருந்தும் நிதியுதவிகள் குவிகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, நேற்று தனது ஒரு மாத சம்பளத்தை, பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு, நன்கொடையாக வழங்கியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஏற்கனவே தங்களின் ஒரு மாத ஊதியத்தை, நன்கொடையாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தைனிக் சவீரா டைம்ஸ் என்ற பத்திரிகை வாசகர்கள் சார்பில் வழங்கப்பட்ட ரூ. 2 கோடி நிதி காசோலை, மத்திய சமூக நீதித்துறை மந்திரி விஜய் சம்ப்லா நேற்று பிரதமரிடம் வழங்கினார். நிலநடுக்கத்தால் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 6 லட்சம் நிவாரணம் மற்றும் படுகாயம் அடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.



 
Top