இரத்தினபுரி - கிலிமல பகுதியிலுள்ள சுரங்கமொன்றுக்குள் சிக்குண்ட நால்வர் உயிரிழந்துள்ளனர்.
சுரங்கத்திற்குள் சிக்கிய ஒருவர் மீட்கப்பட்டு, இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர கூறினார்.
இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில், இன்று மதியம் இவர்கள் அனர்த்தத்திற்குள்ளானதாக அவர் தெரிவித்தார்.
