19ம் திருத்தச் சட்டத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய அவசியமில்லை என சட்டமா அதிபர் யுவன்ஜன விஜயதிலக்க உச்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
19ம் திருத்தச் சட்டத்தில் காணப்படும் எந்தவொரு விடயத்திற்கும் சர்ஜன வாக்கெடுப்பின் மூலம் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் போதுமானது.
நிறைவேற்று அதிகாரம் என்பது மிகப் புனிதமான அதிகாரங்கள் கிடையாது.
நிறைவேற்று அதிகாரத்தை விசேடமானதாக கருதாது, அதன் மாற்றங்களை காலத்தின் தேவையாக கருதப்பட வேண்டும்.
சர்வஜன வாக்கெடுப்பு சுபலமான வழி என்பதனை ஏற்றுக்கொள்கின்றோம். எனினும் பாராளுமன்ற பெரும்பான்மை பலத்தின் ஊடாகவும் அரசியல் அமைப்பில் திருத்தங்களைச் செய்ய முடியும் என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
