GuidePedia

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளதாக, முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூடி இத்தீர்மானத்தை எடுத்ததாக நேற்று மாலை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் துமிந்த தெரிவித்தார்.
அத்துடன் கட்சியின் பொதுச் செயலாளராக, துமிந்த திசாநாயக்கவான தான் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பின்போது, கடந்த ஆட்சியில் அமைச்சர்களாகவிருந்த சரத் அமுனுகம, ஜனக்க பண்டார தென்னகோன், அதாவுத செனவிரட்ண, ரெஜினோல்ட் குரே, விஜித் விஜயமுனி சொய்சா, பியசேன கமகே, எஸ்.பி.நாவின்ன மற்றும் வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு ஜனாதிபதி மைத்திரிக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்தனர்.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் பெரும்பாலானவர்கள், தொடர்ந்தும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குவதாக முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.



 
Top