GuidePedia

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் காரியாலயத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கினிகத்ஹேன பிரதேச செயலாளர் காரியாலத்துக்கு சொந்தமான அம்பேகமுவ கேட்போர் கூட்டம் அமைந்துள்ள கட்டடத்தொகுதியிலுள்ள அறையில் அமைக்கப்பட்டிருந்த சுதந்திரக்கட்சியின் காரியாலயமே அம்பேகமுவ பிரதேச செயலாளர் காரியாலய அதிகாரிகளினால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
சுதந்திரக்கட்சியின் மஸ்கெலியா தொகுதி பிரதான அமைப்பாளர் டப்ளியு.ஜி. ரணசிங்க, இந்த காரியாலயத்தை நடத்தி சென்றதுடன் தேர்தல் காலத்தில் விநியோகிப்பதற்காக பெருந்தொகையான பொருட்கள் இந்த அறையில் இருந்ததாக பிரதேச செயலாளர் காரியாலய அதிகாரிகள் தெரிவித்தனர். 



 
Top