GuidePedia

(க.கிஷாந்தன்)
அட்டன் ஹிஜ்ராபுர பகுதியில் உள்ள வீடு ஒன்றில் உள்ள மலசலகூடத்தின் குழியை சுத்திகரிப்பதற்காக காபைட் இரசாயண பொருளை போட்டதனால் அது வெடித்ததால் ஒருவர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் 12.01.2015 அன்று 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

மலசலகூடத்தின் குழியை சுத்திகரிப்பதற்காக குறித்த நபர் காபைட் இரசாயண பொருளை போட்டதால் அது வெடித்துள்ளதாக அட்டன் பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 
இவ்வாறு உயிரிழந்தவர் நோர்வ10ட் பகுதியை சேர்ந்த சுரேஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




 
Top