பரிசுத்த பாப்பரசரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு சிறைக் கைதிகள் சிலர் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்படவுள்ளனர்.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளையும் மையமாகக் கொண்டு, சிறு குற்றங்களுக்காக சிறைவைக்கப்பட்டுள்ள சிலரே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.