GuidePedia

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் சிலர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர்களான பீலிக்ஸ் பெரேரா, தயாசிறி த திசேர, முன்னாள் பிரதியமைச்சர்களான லலித் திசாநாயக்க, நியோமல் பெரேரா, ஏ.ஆர்.எம்.அப்துல் காதர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஆகியோரே ஜனாதிபதி மைத்திரிக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.
இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்த இவர்கள், மைத்திரியின் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு பூரண ஆதரவளிப்பதாக தெரிவித்தனர்.
இதேவேளை நேற்றைய தினமும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர், ஜனாதிபதி மைத்திரியுடன் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.



 
Top