(எஸ்.அஷ்ரப்கான்)
நான் கடந்த 30 ஆண்டுகள் அரசியலில் இருந்திருக்கின்றேன் ஆனால் ஒருபோதும் எனது சொந்த அரசியலைப் பற்றி பேசியதில்லை. மக்கள் கட்சி என்ற நிலைப்பாடுதான் என்னிடம் இருந்தது. ஆனால் என்னை பேச வைத்திருக்கின்றீர்கள். அதனால்தான் நான் என்ன செய்திருக்கின்றேன் என்பதை பேச முனைகின்றேன் என்று அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம்வை.வை.எல்.எஸ். ஹமீட் ஆவேசமாக தெரிவித்தார்.
கல்முனைக்குடியில் இன்று (14) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் 7 ஆம் இலக்க வேட்பாளர் கலீலுர் ரஹ்மான் மற்றும் இதரவேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிடும்போது,
எமது கட்சிக்கு காரியாலயத்திற்கு நாளாந்தம் அம்பாரை மாவட்டமக்கள் அலையலையாய் நமது தேவைகளை நிறைவேற்றுவதற்காக வந்தபோது இந்த மக்களின் பரிதாபம் கண்டு அதிகாரம் இல்லாமலேயே நாம் நிறைய விடயங்களை செய்து அம்மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி இருக்கின்றோம். இவை எந்த எதிர்பார்ப்புமின்றி செய்யப்பட்ட சேவைகளே. மக்கள் துன்பத்தில் இருக்கும்போது அவர்களது வாக்குகளை பெற்ற அரசியல் தலைவர்கள் துாங்குகின்றபோது நாங்கள் இம்மாவட்ட மக்களுக்கு குரல் கொடுக்கவில்லையா ? நன்றியுள்ள மக்கள் எங்களை பொருந்திக்கொள்வார்கள். சகோதரத்துவ உணர்வுடன் இதனை நாம் நிறைவேற்றினோம். ஆனால் இப்போதுதான் இம்மக்களிடம் நாம் வந்திருக்கின்றோம்.
கல்முனையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கூறுவது போன்றுநாம் சேவை செய்யாமல் இருந்ததில்லை. இதற்கு அம்பாரை மக்களேசாட்சி. மக்களால் தெரிவாகிய இவர்களது கட்சி அலுவலகத்திற்கு மக்கள்செல்லாமல் எம்மிடமே தமது குறைகளை முறையிட்டார்கள். இதனால்விளங்கவில்லையா ? சேவை செய்பவர்கள் யார் என்று,
கடந்த 15 ஆண்டுகள் மு.கா. விற்கு றவூப் ஹக்கீம் தலைமைதாங்கியிருக்கின்றார். அக்காலத்தில் பல தேர்தல்களை சந்தித்து எல்லாதேர்தல்களிலும் அம்பாரை மாவட்ட மக்கள் மு.கா. விற்கேவாக்களித்திருக்கின்றார்கள். ஜனாதிபதித் தேர்தலிலும் அவ்வாறேநடந்தது. இப்போது இந்த மு.கா வினர் சொல்லட்டும் கடந்த 15ஆண்டுகாலமாக அவர்களது கட்சிக்கு வாக்களித்த மக்களுக்காகஎவ்வளவு சேவை செய்திருக்கின்றார்கள் என்று ஒருசாதனைப்பட்டியலை சொல்லட்டும். இந்த கல்முனையில் இத்தனைவீதிகள் அமைத்திருக்கின்றோம். பாலங்கள் அமைத்திருக்கின்றோம்.இத்தனை பொது வேலைத்திட்டங்களைசெய்திருக்கின்றோம்.இவ்வாறான வேலைத்திட்டங்களைமுன்னெடுத்திருக்கின்றோம் என்று கூறட்டும்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இப்பொழுதுதான் இம்மாவட்டத்திலேஒரு பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றது. இங்கு எமது கட்சிக்குஏசுவதுதான் மு.கா வினரின் 15 வருடகால சேவைகளாகும். அதுமடடுமல்லாமல் பொய்யும் புறட்டும் மாத்திரம்தான் இங்குஇவர்களுக்குள்ள மூலதனமாகும். ஒரு பாராளுமன்ற உறுப்பினர்,இரண்டு முறை மக்களால் பாராளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டஒருவர், ஒரு தடவை மேயராக தெரிவு செய்யப்பட்டவர். இவர் கேள்விஎழுப்புகின்றார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர்நாயகம் இந்த பிரதேசத்திற்கு என்ன செய்திருக்கின்றார் என்று, இந்தகேள்வி கேட்பதற்காக ஒரு எம்.பி. தேவையா நமக்கு, நான் இந்தமக்களுக்கு என்ன செய்தேன் என்றுதான் இவர் கூற வேண்டும். அதிகாரம்இல்லாத, பாராளுமன்ற உறுப்பினரல்லாத ஒருவரை பார்த்து இவர் என்னசெய்திருக்கின்றார் என்று கூறுவது எந்த வகையில் நியாயம். ஒருகட்சியின் செயலாளரால் இந்த பிரதேச மக்களுக்கு என்னசெய்யப்பட்டிருக்கின்றது என்று கேட்பது இலங்கை திருநாட்டில் இவரால்மட்டுமே முடிந்த விடயமாகும். இருந்தாலும் இந்த வை.எல்.எஸ். ஹமீட்இங்குள்ள மஹ்மூத் பாலிகா வித்தியாலயத்தில் இந்தகிழக்கிலங்கையிலேயே இல்லாத அழகான நிர்வாக கட்டிடத்தைகட்டியிருக்கின்றார். அதற்குப் பக்கத்தில் 3 மாடி வகுப்பறைக் கட்டிடத்தைகட்டியிருக்கின்றார். பின்னர் விடுதி கட்டப்பட்டதும் இந்த வை.எல்.எஸ்.ஹமீடின் முயற்சியினாலாகும். இவ்வாறு நாங்கள்அதிகாரமில்லாமலேயே செய்த சேவைகளின் பட்டியல் இருக்கின்றது.இதுபோல் இந்த 15 வருடகாலம் நீங்கள் செய்த மக்கள் சேவை என்ன?நான் செய்தது போன்று இவ்வாறான ஒரு கட்டிடத்தைகட்டியிருக்கின்றேன் என்று உங்களால் கூற மடியுமா ? ஏற்பட்டசுனாமியினால் இந்த கல்முனை பிரதேச மக்கள் எல்லோரும்பாதிக்கப்பட்டார்கள். தமிழ், சிங்கள மக்களும் பாதிக்கப்பட்டார்கள்எல்லோருக்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள் வீடுகளைக் கட்டிக்கொடுத்தது. ஆனால் இந்த கல்முனைக்குடி சாய்ந்தமருது மருதமுனைமக்கள் வீதிக்கு இறங்கி உண்ணாவிரதம் இருக்கவில்லையா ?ஆர்ப்பாட்டம் செய்யவில்லையா ? இவர்களுக்கு மட்டும் ஏன் பலவருடங்கள் வீடுகள் வழங்கப்படவில்லை. ஏன் இந்த மக்கள் உங்களுக்குவாக்களிக்கவில்லையா ? ஏன் இந்த 3 ஊர் மக்களுக்கும் இந்த நிலைஏற்பட்டது.
வாக்களிக்க ஒரு கட்சியும், சேவை தேவைப்படும்போது பிரிதொருகட்சியும் செயலாளர் நாயகமும் தேவை. இது என்ன நியாயம் மக்களே !மீனவர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள், என்ற பல்வேறுதுறையினருக்கும் நாம் இங்குள்ள ஒருவராலும் செய்ய முடியாதசேவைகளை செய்திருக்கின்றோம். இதனை செய்தது கல்முனைபாராளுமன்ற உறுப்பினரல்ல. மு.கா. தலைவரல்ல. என்ன செய்தார்என்று கேள்விக்குட்படுத்தப்படும் இந்த வை.எல்.எஸ். ஹமீட்தான்அதனை செய்து கொடுத்திருக்கின்றேன். இது கடந்த கால வரலாறாகும்.
தேசத்திற்கு மகுடம் கண்காட்சி அம்பாரை மாவட்டத்தில் 2012 ஆம்ஆண்டு நடாத்துவதற்கு ஏற்பாடாகியிருந்தது. தயட்ட கிருளயின் கீழ்அம்பாரை மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்காக 6 ஆயிரம்மில்லியன் ரூபாய்கள் அன்னளவாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. அந்த6 ஆயிரம் மில்லியன் ரூபாவில் அம்பாரை மாவட்ட 4 தொகுதிகள்மாத்திரம்தான் இருக்கின்றன. அவ்வாறாக இருந்தால் ஆகக் குறைந்ததுதொகுதிக்கான நிதியையாவது அவர்கள் ஒதுக்கியிருக்க வேண்டும்.ஆனால் அம்பாரை வைத்தியசாலைக்கு மாத்திரம் 600 மில்லியனைஒதுக்கியிருந்தார்கள், ஹிஸ்புல்லாஹ்வுக்கு 750 மில்லியன், பஷீர்சேகுதாவூதிற்கு 600 மில்லியன், இந்தக் கல்முனைக்கு 332 மில்லியன்கள்மாத்திரமே. இதில் 32 மில்லியன்கள் மாத்திரம்தான் இங்குகொண்டுவரப்பட்டது என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா ? 6 ஆயிரம்மில்லியன் ரூபாய்கள் அம்பாரை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுகல்முனைக்கு வந்த பணத்தின் தொகை என்ன ?