GuidePedia

மஹிந்த ராஜபக்சவுடன் சேர்த்து வெட்டிக் கொலை செய்வதாக எனக்கு தொலைபேசி மூலம் மரண அச்சுறுத்தல் விடுப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்தார்.
இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.
தேசத்தை பாதுகாக்கும் ஒன்றியம் நேற்று கொள்ளுப்பிட்டி பேர்ல் சிட்டி ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,
வெலிகம பகுதியில் மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு விட்டு அவருடன் தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்துக்கு சென்றேன்.
அந்த நேரத்தில் என்னுடைய கைப்பேசிக்கு 0752266588, 0718628364, 0758388276 போன்ற இலக்கங்களில் இருந்து அழைப்புகள் வந்தன.
அதில் அவர்கள் மஹிந்த ராஜபக்சவுடன் சேர்ந்து என்னை வெட்டிக் கொலை செய்வதாகவும் இறந்து போன என்னுடைய பெற்றோர்களை தூஷித்தும் மிரட்டினர்.
உடனே இது தொடர்பான முறைப்பாட்டை ஆரம்பத்தில் தங்காலை பொலிஸில் பதிவு செய்தேன். அத்துடன் பொலிஸ் மா அதிபருக்கு அறியப்படுத்தினேன்.
தற்போது பாதாள கோஷ்டியினர் பரவலாக சுற்றித் திரிகின்றனர்.
நான் ஒருபோதும் மரணத்துக்கு அஞ்சவில்லை. இஸ்லாத்தைப் பற்றி முழுமையாக அறியாத அறிவில்லாத சிலரே இவ்வாறான காரியங்களில் ஈடுபடுகின்றனர்.
மேலும் இவர்கள் முஸ்லிம் எனக் கூறிக்கொண்டு ஒரு மனிதனை கொலை செய்வதாக கூறுவது மிகப்பெரிய பாவமாகும்.
இவர்கள் என்னதான் அச்சுறுத்தல் விடுத்தாலும் என்னுடைய மரணம் அல்லாஹ்வின் நாட்டம்படியே இடம்பெறும்.
சிலவேளை எனக்கு முன் இவர்களை அல்லாஹ் நாடினால் மரணிக்கச் செய்வான் என்றார்.



 
Top