அண்மையில், குருநாகல, இப்பாகமுவ, பக்மீகொல்ல பகுதியில் முஸ்லிம் இளைஞர்களைத் தாக்கிய சம்பவத்தில் கைதாகியிருந்த சந்தேக நபர்கள் நால்வரும் இன்றைய தினம் (06) அடையாள அணிவகுப்பின் போது சாட்சிகளால் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து அவர்களது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
சிரேஸ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்டீன் தலைமையிலான சட்டத்தரணிகள் அமைப்பே குறித்த வழக்கில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.