மாத்தறை - வெலிகமையில் இன்று (09) மாலை பொலிஸ் காவலரணில் புகுந்த குழுவினர் அங்கிருந்த பொலிஸ்காரர்கள் மீது வாள்வீச்சு தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதன்போது எஸ்.ஐ தர பொலிஸ் அதிகாரி ஒருவரும் சாஜன்ட் ஒருவரும் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதலை நடத்தியவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சம்பவத்துக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.