GuidePedia

சவூதி அரேபியாவில் ஒரு பள்ளிவாசலில் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏமனின் எல்லையை ஒட்டியுள்ள பகுதியான அபாவில் பாதுகாப்புப் படையினர் வழிபட்டுவந்த பள்ளிவாசலிலேயே தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக சவூதியைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
மே மாதத்தில் இரு ஷியா பள்ளிவாசல்ள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ் குழு பொறுப்பேற்றிருந்தது.
ஏமனில் ஷியாக்கள் தலைமையின கலகக் குழுவினருக்கு எதிரான தாக்குதல்களில் சவூதி அரேபியா நடத்திவருகிறது.
தற்போது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கும் பலரும் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் என சவூதி தொலைக்காட்சிகள் தெரிவிக்கின்றனர்.
உள்நாட்டுப் பாதுகாப்பிற்கான அதிரடிப் படையினரால் அந்த பள்ளிவாசல் பயன்படுத்தப்பட்டுவந்தது.
இந்தத் தாக்குதலை யார் நடத்தியது என்பது இதுவரை தெளிவாகவில்லை. எந்தக் குழுவும் இதுவரை இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை.
கடந்த மாதம் சவூதி அதிகாரிகள் ஐ.எஸ் குழுவைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் 431 பேரைக் கைது செய்தனர். நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மீதும் பாதுகாப்புப் படையினர் மீதும் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.



 
Top