GuidePedia

(க.கிஷாந்தன்)
ஹட்டன் காசல்ரீ பகுதியில் மதுபான விற்பனை நிலையத்தில் 5,000 ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாளை வழங்கி மது போத்தல் கொள்வனவில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தில் நபர் ஒருவர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹட்டன் எபோட்சிலி பகுதியை சேர்ந்த குறித்த சந்தேகநபர் 01.08.2015 அன்று மாலை வேளையில் அட்டன் காசல்ரீ பகுதியில் மதுபான விற்பனை நிலையத்தில் விற்பனையாளரிடம் மதுபானம் கொள்வனவு செய்ததன் பின், 5,000 ரூபாய் நாணயத்தாளை விற்பனையாளரிடம் கொடுத்துள்ளார்.

அதன்பின் விற்பனையாளர் நாணயத்தாள் போலியானது என இணங்கண்ட பின் சந்தேக நபரை தடுத்து வைத்து அட்டன் பொலிஸாருக்கு இச்சம்பவம் தொடர்பாக தகலை வழங்கியுள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் சம்மந்தப்பட்ட மதுபான நிலையத்திற்கு வருகை தந்து சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின் கைது செய்ததோடு வழங்கிய தாளையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை 02.08.2015 அன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



 
Top