GuidePedia

சங்கக்காரா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பாக முன்னாள் இலங்கை அணித்தலைவர் அர்ஜூண ரனதுங்கா கருத்து தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சங்கக்காரா இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.
இது பற்றி உலகக்கிண்ணம் வென்று தந்த முன்னாள் அணித்தலைவர் அர்ஜூன ரணதுங்க கூறுகையில், சங்கக்காரா இலங்கை அணிக்காக சிறந்த பங்களிப்பு அளித்துள்ளார்.
அவர் தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது. ஆனால் அவர் முடிவு எடுத்தவுடனே அதை செய்திருக்க வேண்டும்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் 2 போட்டிகளில் மட்டும் விளையாடுவது சரியல்லை.
விளையாட வேண்டும் என்றால் முழுத் தொடரையும் ஆட வேண்டும். இது இளம் வீரர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புக்கு முட்டுக்கட்டை போடுவது போன்றது.
நான் ஓய்வு முடிவை எடுக்கும் போது சற்று கடினமாக தான் இருந்தது. ஆனால் டெஸ்ட் தொடரின் முதல் நாளே ஓய்வை அறிவித்தேன்.
ஏனெனில் நான் வழியனுப்பும் விழா எதையும் விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.



 
Top