19ம் திருத்தச்சட்டத்திற்கு சபாநாயகர் சமல் ராஜபக்ச இவ்வாரம் கையொப்பமிடுவார் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவரை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த சட்டமூலம் சட்ட வல்லுனர்களால் ஆராயப்பட்டு வருகின்ற நிலையில் பின்னர் அது நீதவானிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து நீதிவானின் அங்கீகாரத்தின் பின்னர் சட்டமூலத்திற்கு சபாநாயகர் கையொப்பமிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டமூலத்திற்கு சபாநாயகர் கையொப்பமிட்டு அனுமதி வழங்கிய பின்னர் சட்டமன்ற சபையை நியமிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
