கொழும்பு பொரளையில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீது நேற்று கல்லெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது பள்ளிவாசலின் கண்ணாடிகளுக்கு சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கான காரணவாதிகள் யார் என்ற விடயம் தெரியவரவில்லை.
இது குறித்து பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.