GuidePedia

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவை, மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ள முயற்சிப்பதாக கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சோமவன்ச அமரசிங்க, கட்சியிலிருந்து விலகிச் சென்றமை பாரிய இழப்பாகுமென அநுரகுமார மேலும் தெரிவித்துள்ளார்.
சோமவன்சவை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ள அநுரகுமார, ரில்வின் சில்வா உள்ளிட்டோர் கருத்துத் தெரிவித்து வந்தாலும், தமக்கு எவ்வித அறிவிப்பும் விடுக்கவில்லையென அண்மையில் சோமவன்ச தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன், அரசாங்கத்திற்கு எதிரான சூழ்ச்சி தொடர்பிலான கலந்துரையாடல் குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய செயற்குழு கொண்டிருந்த நிலைப்பாடு தவறானது எனவும் சுட்டிக்காட்டினார்.
கட்சியிலிருந்து விலகிச் சென்ற சோமவன்ச, கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகிய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியை தக்கவைத்துக்கொள்ள எடுத்த முயற்சி தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரினார். இதனை வலியுறுத்தி அண்மையில் உண்ணாரவிரத போராட்டமொன்றையும் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



 
Top