மரக்குற்றி என எண்ணி 15 அடி நீள மலைப் பாம்பில் ஏறி நின்ற நபர்; அதன் அசைவை உணர்ந்து துள்ளிக் குதித்து ஓட்டம்.
மரக்குற்றி என நினைத்து மலைப் பாம்பு ஒன்றின் மேலேறி புல் அறுத்துக் கொண்டிருந்த நபர் மரக்குற்றி அசைவதை உணர்ந்த போது அது மரக்குற்றி அல்ல. மலைப்பாம்பு என்பதை அறிந்து துள்ளிக் குதித்த சம்பவம் ஒன்று பதுளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
பதுளைபகுதியின் மாணிக்கவல்லி தோட்டத்தைச் சேர்ந்த ஒருவரே மலைப் பாம்பிடமிருந்து தப்பியுள்ளார்.
இவர் தனது பசுவுக்கு புல் அறுத்துக்கொண்டிருந்த போது தாம் ஏற் நின்ற மரக்குற்றி அசையத் தொடங்கியது. அசைவதை அவதானித்த போது அது மலைப் பாம்பு அறிந்து அஅலறிபடி துள்ளிக் குதித்துள்ளார்.
தகவல் அறிந்து அங்கு கூடியவர்கள் வன ஜீவிராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு அறிவித்தும் பயன் கிடைக்காமையினால் அதனை பெரும் சிரமத்துக்கு மத்தியில் கட்டி இழுத்துச் சென்று காட்டுக்குள் விட்டு திரும்பினர்.
இம்மலைப் பாம்பின் நீளம் 15 அடியும் அதன் எடை. 40 கிலோவுமாகும்.
நன்றி - அதிரடி