GuidePedia

(எப்.முபாரக்)                    
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சாராயம் குடித்து விட்டு குழப்பத்தை ஏற்படுத்திய ஒருவருக்கு இன்று புதன் கிழமை(21) ஆறு மாதம் சிறைதண்டனை விதித்து மூதூர் நிதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.                                  பள்ளிக்குடியிப்பு,தந்தபுரம் பகுதியைச் சேர்ந்த எஸ்.புஸ்பராசா வயது(36)என்பவருக்கே அத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் சாராயம் குடித்து விட்டு பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதோடு குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் சந்தேக நபருக்கெதிராக மூதூர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.                         நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில் சந்தேக நபர் குற்றத்தைஒப்புக்கொண்டதால் குற்றவாளியாக இனங்கண்டு 7500 ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அத்தொகையை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஆறுமாதம் சிறைதண்டனை விதித்து மூதூர் நீதிமன்ற நீதிபதி ஐ.எம்.றிஸ்வான் உத்தரவு பிறப்பித்தார்.        



 
Top