GuidePedia

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வாத அமைப்­பி­னரின் எத்­த­கைய செயற்­பா­டு­களும் உள்­நாட்டில் இல்லை. அது தொடர்­பி­லான அச்­சு­றுத்­தல்­களும் இது­வரை இலங்­கைக்குள் இல்லை என  இரா­ணுவ பேச்­சாளர் பிரி­கே­டியர் ஜயனாத் ஜய­வீர தெரி­வித்தார்.

எனினும் நாட­ளா­விய ரீதியில் இரா­ணுவ புல­னாய்­வா­ளர்­களின் கண்­கா­ணிப்பும் கூடிய எச்­ச­ரிக்­கை­களும் தொடர்ந்தும் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

"நாட்டில் தற்­போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வா­தி­களின் அச்­சு­றுத்­தல்கள் உள்­ள­தா­கவும் அது தேசிய பாது­காப்­புக்கு பாரிய அச்­சு­றுத்­த­லாகும் எனவும் கடும்­போக்கு அமைப்­புக்கள் கூறி­வரும் நிலையில் அது தொடர்பில் இரா­ணுவ ஊடகப் பேச்­சா­ளரை கேட்­ட­போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,
"சிரி­யாவில் இலங்­கையர் ஒருவர் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வா­தி­க­ளுடன் இணைந்து போரிட்டு மர­ண­ம­டைந்த செய்­தியின் பின்னர் நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­பி­னரின் செயற்­பா­டுகள் உள்­ள­தாக சிலர் கருத்­துக்­களை முன்­வைக்­கின்­றனர். 
எனினும் அத்­த­கைய பயங்­க­ர­வாத குழு­வொன்றின் அல்­லது அமைப்­பொன்றின் அச்­சு­றுத்­தலோ செயற்­பாடோ எமது நாட்­டுக்குள் இது வரை இல்லை. எமது புல­னாய்­வா­ளர்­களும் படை­யி­னரும் தேசிய பது­காப்பு விட­யத்தில் மிகவும் அவ­தா­ன­மா­கவே உள்­ளனர்.
இலங்­கையர் ஒருவர் சிரி­யாவில் குறித்த பயங்­க­ர­வாத இயக்­கத்­துடன் இணைந்து போரிட்டு மர­ண­மா­னமை குறித்து பொலிஸார் பிரத்­தி­யேக விசா­ர­ணை­களை நடத்தி வரும் நிலையில், இரா­ணு­வத்தின் புல­னாய்வுப் பிரி­வா­னது மிகவும் அவ­தா­னத்­து­ட­னேயே உள்ளது.
இதுவரை ஐ.எஸ். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் எமக்கில்லை. அது தொடர்பில் நாம் மிகவும் விழிப்புடன் செயற்பட்டு வருகின்றோம்" என்றார்.



 
Top