GuidePedia

(க.கிஷாந்தன்)
தீபாவளி பண்டிகைக்காக ஹட்டன் பகுதியில் இருந்து தூரப்பிரதேசங்களுக்கு பயணிக்கும் தனியார் பஸ்களையும் ஹட்டன் பகுதிக்கு செல்லும் வேன்கள் மற்றும் பஸ்கள் 20.10.2014 அன்று மத்திய மாகாண தனியார் போக்குவரத்து சபையின் வாகன பரிசோதக அதிகாரிகள் ஹட்டனில் திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர். 
இதில் பணம் கொடுத்து பயணச்சீட்டு பெறாதவர்கள், நடத்துனர் அனுமதி பத்திரம் இல்லாமல் இருந்த நடத்துனர்கள், பஸ்ஸில் அதிகப்படியான பயணிகளை ஏற்றிச்சென்ற சாரதிகளையும் இவ்வாறு சோதனைக்குட்படுத்தி குற்றங்களை இனங்கண்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த பரிசோதனை தீபாவளி பண்டிகை முடியும் வரை நடத்தவிருப்பதாகவும் கடந்த 2 நாட்களில் பரிசோதனை செய்ததன் மூலம் ஒரு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 












 
Top