GuidePedia

இராகலை கந்தபொல பகுதியிலுள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் இரண்டு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் பலத்த காயங்களுடன் கண்டி பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளார்.
கந்தபொல பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
பாடசாலை இடைவேளை நேரத்தில் இரண்டு மாணவர்கள் ஒருவருக்கொருவர் நேற்று முன்தினம் மோதலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இதனையடுத்து, இரண்டு மாணவர்களையும் கொனிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மோதலில் காயமடைந்த மற்றைய சிறுவன் சிகிச்சைகளின் பின்னர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பில் இராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



 
Top