GuidePedia

தமிழீழ வி்டுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியமை குறித்து அதற்கு கருத்து தெரிவிக்கும் முகமாக பிரதான நகரங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
இரு வேறு வகையான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இதில் ஒன்று உரிமை கோரப்படாத நிலையி்லும் மற்றயது உரிமை கோரியும்  ஒட்டப்பட்டுள்ளது.
அதில் ஒரு சுவரொட்டியில் 'ஐரோப்பிய ஒன்றியம் தடையை நீக்கியது, ரணில் ஐரோப்பாவில் வேலையை ஆரம்பித்தார்' என்ற வாசகத்துடன் ஒட்டப்பட்டுள்ளது.
மற்றய சுவரொட்டியில் 'புலித் தடை நீக்கியது! பின்னணியில் இருக்கும் எதிர்க்கட்சி அரசியல்வாதி யார்?' ஏன்ற வாசகத்துடன் ஒட்டப்பட்டுள்ளது. இதற்கு சிலுமின பத்திரிகை உரிமை கோரியுள்ளது.
இவ்விரண்டு சுவரொட்டிகளும் கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் ஒட்டப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகள் மீதான தடையை கடந்த வியாழக்கிழமை, ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியிருந்நதமை குறிப்பிடத்தக்கது.




 
Top