GuidePedia

(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
சிறையிலுள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு அரசாங்கம் புனர்வாழ்வளித்து அவர்களை விடுதலை செய்யுமென தெரிவித்துள்ள மீள்குடியேற்றம், 'புனர்வாழ்வு மற்றும் இந்து கலாச்சார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இவ்வாறு புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் ஜனநாயக ரீதியில் ஏனைய மக்களைப்போல் வாழ்வதற்கு தேவையான அனைத்து வழிவகைகளையும் அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்குமென தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நேற்று வியாழக்கிழமை(19) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
சிறையிலுள்ள தமிழ் கைதிகளை விடுவிப்பது, படையினர் வசமுள்ள தமிழ் மக்களுடைய காணிகளை விடுவித்து மக்களிடம் அதனை கையளிப்பதுää மக்களுடைய மீள்குடியேற்றம் மற்றும் வடமாகாண மக்களின் எதிர்நோக்கும் இன்னோரன்ன பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் தமிழ்க் கட்சிகளுடன் கதைத்து வருகின்றது.
எனவே இவை அனைத்துக்கும் அரசாங்கம் சுமுகமான தீர்வுகளை பெற்றுக்கொடுக்குமென அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மேலும் தெரிவித்தார்.



 
Top